மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை புனே அணி வெற்றிப் பெற்றது. புரோ கபடி போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று புனே -தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த இரு அணிகளும் வலுவான நிலையில் இருந்தன. நீயா, நானா பார்த்து விடுவோம் என்பது போல் இரு கபடி அணி வீரர்களும் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று மாறி மாறி புள்ளிகள் எடுத்து தங்களின் அணியை முன்னேற்றினர்.
இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் அதிக புள்ளிகளை எடுத்ததால் இரு அணிகளும் புள்ளி மழையில் நனைந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. முதல் பாதியிலும் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் யார் வெற்றி பெறுவார்கள் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையே இருந்தது.
காரணம் ஒரு அணி ஒரு புள்ளி எடுத்தால், எதிர் அணி 2 புள்ளிகள் எடுத்தது. இப்படி திறில் ஆட்டத்தை இரு அணி வீரர்களும் கொடுத்துக் கொண்டே இருந்தனர். இறுதியில் புனே அணி 53 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 50 புள்ளிகளும் எடுத்தது. இதனால் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றிப் பெற்றது.
புனே அணிக்கு கிடைத்த 7வது வெற்றி ஆகும். 21 போட்டிகளில் விளையாடி 11 தோல்விகளை பெற்ற நிலையில் இந்த வெற்றி ஒரு ஆறுதல் வெற்றியாக புனேவுக்கு கிடைத்துள்ளது. நேற்றைய போட்டி முடிந்த நிலையில் டெல்லி, பெங்கால், ஹரியானா, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளது.
இதில் டெல்லி, பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: