சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகில் படத்தை மட்டுமே ஒரு வாரத்திற்கு திரையிடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
விஜய்- அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம்தான் பிகில். பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.
இதில் மிகப் பிரமாண்டமாக தயாராகியுள்ள பிகில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அதிக தியேட்டர்களில் பிகில் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு வாரத்திற்கு பிகில் படம் மட்டுமே திரையிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் செம உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பிகில் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று தயாரிப்பாளரும் உறுதியாக கூறியுள்ளதால் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த படத்தில் விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.