ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள காஸ்னி மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைக் குறிவைத்து இன்று செவ்வாய்க்கிழமை ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 19 மாணவிகள் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை காஸ்னி மாகாண அரசின் ஊடகப் பேச்சாளர் அறீப் நூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.