Friday 29th of March 2024 01:52:55 AM GMT

LANGUAGE - TAMIL
தீக் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவந்த பெண் சாவு!

தீக் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சாவு!


கடந்த 7 ஆம் திகதி மதியம் குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த பொண் சிகிச்சை பலனின்றி நேற்று சாவடைந்தார்.

குறித்த சம்பவத்தில் வவுனியா, புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 35 வயதான தேவதர்சினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே சாவைடந்தார்.

இதேவளை சாவடைந்த பெண்ணின் கணவன் என கூறப்படும் நபரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

இதன்போது வைத்தியசாலையின் மாடிக்கட்டடத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் மரணம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE