கிழக்கு ஜேர்மனிய நகரமான ஹாலேவில் உள்ள ஜெப ஆலயத்திற்கு அருகே நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஜெப ஆலயத்திற்கு அருகே ஒரு பெண் கொல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பின்னர் துப்பாக்கி ஏந்திய நபர் சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையில் மற்றொருவரை சுட்டுக்கொன்றார்.
இந்த தாக்குதலில் மூன்று சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என மத்திய குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வெறிதனமாக தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டார்களா? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் தெரிவித்துள்ளார்.
ஆயுததாரி ஒருவர் கடைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அந்தக் கடைக்குள் ஐந்து முதல் ஆறு வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அங்கிருந்த கழிப்பறை ஒன்றுக்குள் தான் ஒழிந்துகொண்டதாக கடைக்குள் இருந்த சாட்சியான கான்ராட் ரோஸ்லர் என்பவர் தெரிவித்தார்.
'எனக்குப் பின்னால் இருந்தவர் இறந்துவிட்டதாக நினைக்கிறேன். நான் கழிப்பறையில் ஒழிந்துவிட்டேன். மற்றவர்கள் வெளியே ஒடுவதற்கு முயன்றார்கள். நான் கழிப்பறையை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்துவிட்டேன்'' என அந்தச் சாட்சி தெரிவித்தர்.
சந்தேக நபர் பயன்படுத்திய கார் கண்காணிப்பு கமரா மூலம் அடையாளம் காணப்பட்டது. ஹாலேவிலிருந்து சுமார் 424 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யூஸ்கிர்ச்சென், நோர்த் ரைன் - வெஸ்ட்பாலியா நகரில் இந்தக் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.