Friday 29th of March 2024 06:40:28 AM GMT

LANGUAGE - TAMIL
விருந்தினர்களுடன் நாளைமறுதினம் யாழ். வருகிறது முதல் விமானம்!

விருந்தினர்களுடன் நாளைமறுதினம் யாழ். வருகிறது முதல் விமானம்!


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று 17-ம் திகதி தரையிறங்கவுள்ளது.

விமான சேவை ஆரம்பிக்கும் வகையில் இந்தியாவில் இருந்து வரும் இந்த விமானத்தில் அழைக்கப்பட்ட விருந்தினர்களும் இந்தியாவில் இருந்து வரவுள்ளனர்.

எதிர்வரும் 17-ம் திகதி வரும் வியாழக்கிழமை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து விமான நிலையத்ததை திறந்து வைப்பார்கள் எனக் கூறுப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து முதற்கட்டமாக வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்தப்படும் என அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் 17-ம் திகதி ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இரண்டு அதிகாரிகள் ஆரம்பத்தில் பொறுப்பாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்ற குடிவரவு, குடிவரவு திணைக்கள அதிகாரிகள் 15 பேர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படவுள்ளனர் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க கூறியுள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE