Friday 29th of March 2024 06:46:22 AM GMT

LANGUAGE - TAMIL
செம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைப்பு!

செம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைப்பு!


அமரர் இராசையா இராசரட்ணம் அவர்கள் ஞாபகார்த்தமாக அவர்கள் குடும்பத்தினரால் 25 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மயான இளைப்பாறு மண்டபம் கடந்த 13.10.2019 அன்று மேற்படி குடும்பத்தினரால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

செம்மணி இந்துமயான சபையின் தலைவர் லயன்.திரு.சி.லட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாயன்மார்கட்டு குளத்தடிபிள்ளையார் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.மஹாலிங்கசிவக் குருக்கள் ஆசியுரை வழங்கினார்.

யாழ்.தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி.சின்னத்தம்பி பத்மராஜா,வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு.நடேசபிள்ளை கஜேந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

மயான வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்களை நாட்டி தியாகி அறக்கொடை நிறுவனத்தினர் பராமரித்து வருகின்றமையும் சிறப்பம்சமாகும்.

மேற்படி மயான எரிகொட்டகையும் 10 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE