ரஷ்யாவில் நீர்த்தேக்கம் ஒன்றின் அணைக்கட்டு இன்று உடைந்து பெருக்கெடுத்த நீரில் சிக்கி 15 பேர் பலியாகினர். 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலர் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணியில் ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அணை கட்டப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.