இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் தற்போது விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். ரசிகர்களை கவர்ந்த இவர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் படங்களில் நடித்தார்.
கடந்த சில நாட்களாக தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எந்த தகவல்களும் பதிவிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று ஓய்வில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை மஞ்சிமா மோகனும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ஓர் விபத்து நடந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று, ஒரு மாதத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று மஞ்சிமா மோகன் பதிவிட்டுள்ளார்.