புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழிழ விடுதலைப்புலிகளின் சீருடைகள், சீருடைத்துணிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, இரணைப்பாலை குழந்தை யேசு ஆலய வளாகத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டியபோது குறித்த உடமைகள் வெளிப்பட்டன.
இதுகுறித்து புதுப்புடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் அவற்றை மீட்டனர்.