Friday 19th of April 2024 01:46:05 AM GMT

LANGUAGE - TAMIL
லண்டனில் சிறுவர்கள் இருவர் குத்திப்படுகொலை!

லண்டனில் சிறுவர்கள் இருவர் குத்திப்படுகொலை!


லண்டனில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை சரமாரியான கத்தியால் குத்தியதில் 17 வயதான 2 சிறுவர்கள் துடிதுடித்துப் பலியாகினர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

லண்டனில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றது.

நேற்று முன்தினம் இந்த வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் 15 முதல் 20 வரையானோர் கலந்து கொண்டு ஆடிப்-பாடி மகிழ்ச்சியாக இருந்தனர்.

நள்ளிரவை தாண்டி கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தபோது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினர்.

இதில் வீட்டுக்கு அருகே வசிக்கும் டோம் அன்சா மற்றும் பென் கில்ஹாம் ஆகிய 17 வயதான 2 சிறுவர்கள் துடிதுடித்து இறந்தனர். மேலும் இளைஞர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களின் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருவதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தபபியோடிவிட்டனர்.

இரு தரப்பினரிடையிலான முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கொiலைகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE