Thursday 28th of March 2024 10:23:50 AM GMT

LANGUAGE - TAMIL
கிரிக்கெட் வீரர்களுக்கு குளிர்பானம் பரிமாறினார் ஆஸி. பிரதமர்!(படங்கள்)

கிரிக்கெட் வீரர்களுக்கு குளிர்பானம் பரிமாறினார் ஆஸி. பிரதமர்!(படங்கள்)


இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியாவின் பிரதமர் அணிக்கும் இடையில் கான்பெராவில் இன்று இடம்பெற்ற ரி-20 கிரிக்கெட் போட்டியின் இடைவேளையின்போது ஆச்சரியமளிக்கும் விதத்தில் மைதானத்துக்குள் குளிர்பானம் எடுத்துச் சென்று வீரர்களுக்கு பரிமாரினார் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன்.

இலங்கை அணி முதலில் துடுப்பாடிக்கொண்டிருந்தபோது 16 ஆவது ஓவரில் இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்பட்டது.

இதன்போது, போட்டியைக் காண வந்திருந்த அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மொறிசன், தீடீரென தனது அணியின் தொப்பியை அணிந்துகொண்டு குளிர்பானங்களை எடுத்துகொண்டு ஆஸ்திரேலிய வீரர்களிடம் சென்றார்.

வீரர்களுக்குக் குளிர்பானங்களை வழங்கிய அவர், அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டு மீண்டும் மைதானத்துக்குத் திரும்பினார்.

கான்பெராவில் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையிலான இன்றைய ரி-20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரதமர் லெவன் அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

IMAGE_ALT


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE