Wednesday 24th of April 2024 05:48:03 AM GMT

LANGUAGE - TAMIL
இந்தியா- வங்கதேச டெஸ்ட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்த முயற்சி!

இந்தியா- வங்கதேச டெஸ்ட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்த முயற்சி!


இந்தியா- வங்காள தேச அணிகள் இடையே நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பகல்-இரவு போட்டியாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிகள் செய்து வருகிறது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவ.22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த போட்டியை பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த முயற்சித்து வருகிறோம். இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இதற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ‘பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு வங்காளதேசம் சம்மதம் தெரிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவருடன் பேசியுள்ளேன்.

வீரர்களுடன் கலந்து பேசி இது குறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை கொண்டு வரப்படும். புதிய நிதி கமிட்டி இந்த ஒப்பந்த முறை குறித்து திட்டம் உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE