Thursday 18th of April 2024 05:54:24 PM GMT

LANGUAGE - TAMIL
ஒன்ராரியோவில் வீடொன்றிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!

ஒன்ராரியோவில் வீடொன்றிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!


ஒன்ராரியோ - பிராம்ப்டன் பகுதியில் உள்ள வீட்டில் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பரராம்ப்ரன் - ஹைபர்டன் கிரசெண்டில் உள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து புதன்கிழமை இரவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சடலங்கள் இருந்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

அங்கிருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன என பீல் பிராந்திய பொலிஸ் அதிகாரி ஹீதர் கேனன் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறினார்.

சிறுவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து பொலிஸார் கருத்து வெளியிட மறுத்துவிட்டனர்.

வீட்டிற்குள் 'என்ன நடந்தது? என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னரே இது குறித்த தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவர்களின் மரணம் தொடர்பில் தகவலறிந்த எவரும் பீல் பொலிஸ் படுகொலைப் பிரிவினரையோ அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரையோ தெடர்புகொண்டு இரகசியமாக தகவலகளை வழங்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE