Friday 29th of March 2024 02:03:11 AM GMT

LANGUAGE - TAMIL
சிறுவர் சிந்தனைத் தமிழ் கவிதை நூல் வெளியீடு

சிறுவர் சிந்தனைத் தமிழ் கவிதை நூல் வெளியீடு


வீரசிங்கம் பிரதீபன் எழுதிய சிறுவர் சிந்தனைத் தமிழ் கவிதை நூல் வெளியீட்டு விழா 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியாவில் நடைபெறவுள்ளது.

வவுனியா பிரதேச கலாசார மண்டபத்தில் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் வித்தியாரத்னா ந.பார்த்தீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்து கொள்வார்.

வவுனியா பிரதேச கலாசாரப் பேரவையின் உபதலைவர் தமிழ்மணி அகளங்கன், வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா, சிரேஸ்ட சட்டத்தரணி க.தயாபரன், ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம், வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன், வவுனியா தெற்கு கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் நிறைமதி தசாவதாரன், தமிழ் விருட்சத்தின் தலைவர் க.சந்திரகுமார், இந்து கலாசார அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் ச.விமலச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொள்வர்.

அறிமுகவுரையை வவுனியா கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி பொ.சத்தியநாதனும், நூல் நயவுரையை கலாபூஷணம் மேழிக்குமரனும் ஆற்றுவர்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE