தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிய சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக தாயும் மகளும் சென்றிருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற இருவரும் பஸ்ஸில் திரும்பி வந்துகொண்டிருந்தப்போது, அதில் பயணித்த இளைஞர் ஒருவர், எல்பிட்டிய காட்டுப்பகுதி வரும்வேளை சிறுமியை பஸ்ஸிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சிறுமியின் தந்தையின் முறைப்பாட்டையடுத்து ஹேம்மாதம பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தடயவியல் வைத்தியரிடம் சிறுமியை ஒப்படைத்து அறிக்கை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பஸ்ஸில் வீடு திரும்பிய தனது மகளும், மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று தந்தையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.