கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 வாக்காளர்கள் நாளைமறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் 1,258 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கிழக்கு மாகாண தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் 94 ஆயிரத்து 781 பேரும், மூதூர் தொகுதியில் 10 ஆயிரத்து 730 பேரும், சேருவில தொகுதியில் 79 ஆயிரத்து 303 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் கல்குடாத் தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 974 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94 ஆயிரத்து 648 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 3 ஆயிரத்து 790 பேர் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 74,421 வாக்காளர்களும், சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியில் 88 ஆயிரத்து 217 வாக்காளர்களும், கல்முனைத் தேர்தல் தொகுதியில் 76,283 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 869 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 523 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.