நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலையொட்டி நாடு முழுவதும்; விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் குறைவாகவுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை இடம்பெறவுள்ள தேர்தலில் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைள் யாவும் கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்து.
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்; 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதேவேளை, இலங்கை தேர்தல் வரலாற்றில் மிக நீளமான இரண்டு அடி வாக்குச் சீட்டு நாளை வாக்களிப்புக்கு வழங்கப்படவுள்ளது.
வாக்குப்பதிவு நாளை காலை 07 மணிக்கு தொடங்கி மாலை 05 மணிக்கு நிறைவடையும்.