கொழும்பு றோயல் கல்லூரியில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலர் திடீரென மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
"சுமார் 20 தொடக்கம் 25 அதிகாரிகள் இன்று பகல் உட்கொண்ட உணவு ஒவ்வாமை காரணமாக தலைச்சுற்று மற்றும் மயக்கநிலையை அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்" என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.