இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
எங்கள் இரு நாடுகளுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளேன்
அமைதியான தேர்தல் ஒன்றை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் ருவிற்றர் செய்தியில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.