ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஷபக்ஷ வெற்றி பெற்றுள்ள நிலையில் நுகேகொடவில் உள்ள அவரது இல்லத்தில் பெருமளவு ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக குவிந்த மக்களைச் சந்தித்து கோத்தாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
அத்துடன், பொதுஜன பெரமுன மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கோத்தாபய ராஜபக்ஷவைத் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இன்று பிற்பகல் கோத்தபாய வெற்றி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிடவுள்ளளார்.
இதனையடுத்து நாளை ஜனாதிபதி பதவியேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.