ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றியடைந்ததையடுத்து பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தானின் அலுவலகத்தில் இருந்து பேரணியாக வாகனங்களில் வந்த ஆதரவாளர்கள் வவுனியா நகர் வழியாக பேரணியாக சென்றனர்.
இதேவேளை வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன் மேலுமொரு ஆதரவாளர் குழு முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த கொப்பேகடுவவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் ஈ.பி.டி.பி கட்சியினர் தமது கட்சி கொடியினை ஏந்தியவாறு வவுனியா வீதியேங்கும் பேரணியாக வாகனங்களில் சென்றிருந்தனர்.