நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமையன்று இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்த நாடளாவிய ரீதியில் உள்ள பொது ஜன பெரமுன கட்சியிம் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்திலும் கோத்தபாய ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் மன்னார் பஸார் பகுதியில் பதாதைகளை வைத்து வெடி கொழுத்தி ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் சிங்கள பகுதிகளில் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு அதிகளவு வாக்குகள் வழங்கப்பட்ட போதிலும் மன்னார் மாவட்டம் உட்பட வடக்கு - கிழக்கு பகுதிகளில் சொற்ப எண்ணிக்கையான வாக்குகளே கோத்தபாய ராஜபக்ஸவிற்கு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.