நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்ச நாளை தன்னுடைய சகோதரன் மஹிந்தராஜபக்சவின் பிறந்தநாளில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் றுவன்செலிசாயவில் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
நாளை காலை பதினொரு மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.