Friday 19th of April 2024 07:57:19 AM GMT

LANGUAGE - TAMIL
இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!

இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!


"இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கோட்டாபய ராஜபக்சவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்."

- இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த நான் ஜனாதிபதி பதவியின் கடமைகளை நிறைவு செய்கின்றேன்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது எதிர்கால நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெற தனது ஆசீர்வாதங்களையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அனைவருடனும் இணைந்து தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் எனது பொறுப்புக்களை எதிர்காலத்திலும் நிறைவேற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளேன்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE