1990 ம் ஆண்டு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற விமான தாக்குதலில் கொல்லப்பட்ட 12 பொதுமக்களது 29ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக வன்னிகுரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்