வடமராட்சி எல்லங்குளம் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
சிவாஜிங்கம் உள்ளிட்டவர்கள் அங்கு அஞ்சலி செலுத்த சென்றபோது இராணுவத்தினர் அவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பினர்.
இதனையடுத்து இராணுவ முகாம் அமைந்துள்ள துயிலும் இல்லத்துக்கு அருகாமையில் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.