முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவ முகாம் காணப்படுகின்ற நிலையிலும் மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்காக துயிலும்இல்ல வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் வணக்கம் செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருப்பதாக முல்லைத்தீவிலிருந்து அருவி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தங்கள் உறவுகளை ஒரு சேர சுடறேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு 6.05மணிக்கு நடைபெறும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.