Friday 29th of March 2024 10:46:01 AM GMT

LANGUAGE - TAMIL
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு இராணுவ கட்டளை அதிகாரி பலி!

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு இராணுவ கட்டளை அதிகாரி பலி!


ஆப்கானிஸ்தான் - ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மர்ஜாஹ் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படைப் பரிவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஷகிருல் முக்பில் பலியானார்.

மேலும் 3 பேர் இந்தக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதுடன், பத்திரிகையாளர்களும் காயம் அடைந்தனர்.

மர்ஜாஹ் மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாயிகள் தின நிகழ்வில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.

குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்ககுதலை தலிபான்கள் அல்லது ஐ.எஸ. பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில் அங்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE