Wednesday 24th of April 2024 02:55:29 AM GMT

LANGUAGE - TAMIL
நீதிக்காகப் போராடும் ஒருவனாக  மீண்டும் அரசியலுக்கு வருவேன்!

நீதிக்காகப் போராடும் ஒருவனாக மீண்டும் அரசியலுக்கு வருவேன்!


"அநீதி செய்பவர்கள் வாழலாம். ஆனால், நீதிக்காகப் போராடும் ஒருவனாக நான் மீண்டும் வருவேன். அரசியலில் எனது கதை முடியவில்லை."

- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலனறுவையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"2014ஆம் ஆண்டு ராஜபக்சவை விட்டு நான் வெளியேறும்போது கருங்கல்லில் மோதினீர்கள் என்று எனது ஊரில் கூறினார்கள். ஆனால், எனக்கு அதைப்பற்றி கவலை, அச்சம் இருக்கவில்லை.

இப்போதும் எனது பதவிக்காலம் முடிந்தவுடன் என் கதை முடிந்துவிட்டதாகச் சிலர் நினைக்கின்றனர். இல்லை நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன்.

கூடுதல் அவமானங்களைச் சந்தித்தவர் புத்தர். இயேசுவை சிலுவையில் அறைந்தனர். தாமரை மொட்டு கொடுத்து காந்தியைச் சுட்டார் கோட்ஸே. அநீதி செய்பவர்கள் வாழலாம். ஆனால், நீதிக்காகப் போராடும் ஒருவனாக நான் மீண்டும் வருவேன்

எனது இறுதி மூச்சை சுவாசிக்கும்வரை நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவேன். அதை எவராலும் தடுக்கவே முடியாது" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE