Friday 19th of April 2024 05:00:39 PM GMT

LANGUAGE - TAMIL
சபாநாயகர் பதவி துறக்கிறாரா கரு?! ஐ.தே.க தலைமை தொடர்பில் தொடர் குழப்பம்!

சபாநாயகர் பதவி துறக்கிறாரா கரு?! ஐ.தே.க தலைமை தொடர்பில் தொடர் குழப்பம்!


எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க விருப்பம் வெளியிட்டிருக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டிருந்தார் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் டுவிட்டரில் கடந்த வாரம் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில், இன்றைய பேச்சுக்கும், கடந்த வாரம் இடம்பெற்றிருந்த சமரசப் பேச்சுக்கும் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளாதமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே அவர் இந்த யோசனையை முன்வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவாராக இருந்தால், அவர் சபாநாயகர் பதவியிலிருந்து உடன் விலக வேண்டும்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE