Thursday 28th of March 2024 09:24:44 AM GMT

LANGUAGE - TAMIL
பிரியங்க பெர்னாண்டோவுக்கு அபராதம் விதித்தது லண்டன் நீதிமன்றம்!

பிரியங்க பெர்னாண்டோவுக்கு அபராதம் விதித்தது லண்டன் நீதிமன்றம்!


பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக லண்டனில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் 2500 பவுண்ட் அபராதம் விதிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர் பிரிகேடியரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, நீதவான் நீதிமன்ற அலுவலக சபைக்கு இடையில் ஏற்பட்ட தாமதப் பிரச்சினை காரணமாக அது நீக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE