இரணைமடுக் குளத்தின் மேலதிகமாக 2 வான் கதவுகள் திறக்கப்பட்டன. இரவு பத்து மணி அளவில் நீர் மட்டம் 34.4 அடியாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு அதிகாரிகள் பிந்திய நீர்மட்ட அளவினை அறிவித்துள்ளனர்.
இரண்டு கதவுகள் 6 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 12 அங்குலமாகவும் இரண்டு கதவுகள் 18 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 24 அங்குலமாகவும் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு அதிகாரிகள் தற்போது வரையில் பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.