மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற இளைஞன் மரம் ஒன்றுடன் மோதி வித்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் தீவகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை - நாரந்தனை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் புளியங்கூடல் - ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த வி. வசீகரன் வயது 32 என்பவரே உயிரழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைளை ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்