வியட்நாம் - வின்புக் மாகாணத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
மாடிக் கட்டடம் ஒன்றின் ஒரு பகுதியில் செயற்பட்டு வந்த இந்த உணவு விடுதி நேற்று திடீரெ தீப்பற்றி எரிந்தது. தீ ஏனை பகுதிகளுக்கு வேகமாகப் பரவியது.
இதனால் அந்தக் கட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது.
வியட்நாமில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3,454 தீ விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 88 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.