தொடர்ந்து பெய்த கனமழையால் நீர்மட்டம் அதிகரித்திருந்த நிலையில் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டிருந்த இரணைமடுக் குளத்தின் ஆறு வான் கதவுகள் மூடப்பட்டுள்ளன.
இன்று காலை 06.00க்கு வெளியாகிய நீர்ப்பாசனத் திணைக்களத் தகவலின் படி ஆறு வான் கதவுகள் மூடப்பட்ட நிலையில் ஏனைய எட்டுக் கதவுகளும் தலா 0' - 06" அளவின் அடிப்படையில் திறந்துவிடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.