கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சுவிஸ் தூதரப் பெண் பணியாளர் மூன்றாவது நாளாகவும் இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடம் மீண்டும் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதற்கு அமையவே இன்றும் அவர் பிரசன்னமாகியுள்ளார். சுவிஸ் தூதரக அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றதாக தெரியவருகிறது.