இரணைமடுக் குளத்திற்கான நீர் வரத்து மீண்டும் அதிகரித்த நிலையில் குளத்தின் கதவுகளை மீண்டும் திறந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் முன்னெடுத்துவருகின்றனர்.
காலை 9மணிக்கு இரண்டு கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் 10 மணிக்கு மேலதிகமாக இரண்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை குளத்தின் நீர் மட்டம் 35-03” அடியாக பதிவாகிய நிலையில் 9.00மணிக்கு குளத்தின் 04ஆம் 05ஆம் கதவுகள் தலா 0'-06" என்ற அளவில் திறக்கப்பட்டிருந்தன.
பத்துமணித் தரவுகளின் அடிப்படையில் நீர் மட்டம் 35'-03” அடியாக காணப்படுவதாகவும் 04ஆம் 05ஆம் கதவுகள் தலா 1'-00" அடியாகவும் 03ஆம் 06ஆம் கதவுகள் 0'-06" அடியாகவும் திறக்கப்பட்டுள்ளன.
நீர்வரத்து தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் மீளவும் ஏனைய கதவுகளும் படிப்படியாகத் திறக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.