வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,வவுனியா வர்த்தக சங்கம்,பொலிஸ் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரிபிரிவு, ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்களை உள்ளடக்கியதான மாபெரும் டெங்கு ஒழிப்பு மேற்பார்வை நடவடிக்க வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
இதன்போது டெங்கு தாக்கம் அதிகம் உள்ள வவுனியா நகரத்தை உள்ளடக்கிய, வீடுகள், வர்த்தகநிலையங்கள்,அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிற்கு சென்ற உத்தியோகத்தர்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளப்படுத்தியதுடன், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த உரிமையாளர்களிற்கு எச்சரிக்கை விடுத்ததுடன், சிலர் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்தனர்.
வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் உரிய திணைக்களங்கள் மற்றும் பொதுஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.