அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகார துஷ்பிரயோகம், காங்கிரஸ் அவையை அவமதித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்நாட்டு இரு அவையிலும் விவாதித்து கண்டன தீர்மானம் நிறைவேற்ற நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் முறையே 23 மற்றும் 17 வாக்குகள் பதிவிட்டு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் அடுத்த கட்டமாக சம்பிரதாய ஒப்புதலுக்காக செனட் சபைக்கு இது அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அதன்பின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்தக் கண்டன தீர்மானம் வெற்றி பெறும்பட்சத்தில் ட்ரம்பின் பதவி பறிபோகும்.
நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் உள்ளமை குறிப்பிடத்தக்கது.