வவுனியா ,சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இவ் வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று பெருமளவிலானோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பான அலங்காரம் மற்றும் ஆராதனை நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் தினத்தில் சிறப்பு ஆராதனையில் அனைவரையும் கலந்துகொண்டு இறையாசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இயேசுவின் அற்புத திருசபையினர் அழைக்கின்றனர்.