Thursday 25th of April 2024 07:47:53 AM GMT

LANGUAGE - TAMIL
மூடப்பட்டதாக கூறிய தளத்திலிருந்து வடகொரியா மீண்டும் ஆயுத சோதனை

மூடப்பட்டதாக கூறிய தளத்திலிருந்து வடகொரியா மீண்டும் ஆயுத சோதனை


மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட சோகா ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் எந்த வகையான சோதனை இடம்பெற்றது என்பதை வடகொரிய அறிவிக்கவில்லை.

அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்கா – வடகொரிய இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா இறுக்கமாக்கியது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரிய அடுத்தடுத்து பல்வேறு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

தங்கள் மீதான பொருளாதார தடைகளை விலக்கிவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்காவுக்கு வட கொரியா நிபந்தனை விதித்தது. இந்நிலையில், அமெரிக்காவிடம் ஏற்கனவே மூடுவதாக உறுதி அளிக்கப்பட்ட சோகா ரொக்கெட் தளத்தில் வட கொரியா நேற்று மீண்டும் முக்கிய சோதனை நடத்தி உள்ளது. இது ரொக்கெட் அல்லது ஏவுகணை சோதனையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE