Thursday 18th of April 2024 05:33:02 PM GMT

LANGUAGE - TAMIL
முதலீட்டாளர்களின் வதிவிட உரிமை திட்டத்தை இடைநிறுத்தியது கனடா!

முதலீட்டாளர்களின் வதிவிட உரிமை திட்டத்தை இடைநிறுத்தியது கனடா!


1.2 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கனடாவின் - கியூபெக் மாகாணத்தில் நிரந்தர வதிவிட உரிமை பெறும் செயற்றிட்டம் 2020 ஜூலை முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் 1.2 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்வோர் நிரந்த வதிவிட உரிமையப் பெற்றுக்கொள்வதற்கு இத்திட்டம் வழிவகுத்தது.

இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் கனடாவில் குடியேற பல ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் நிரந்தர வதிவிடத்திற்கான அனுமதி பெற கிடைத்துள்ள கிட்டத்தட்ட 20,000 விண்ணப்பங்கள் இன்னும் செயற்படுத்தப்படவில்லை என கியூபெக்கின் குடிவரவு அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE