ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தலைவராக அசோக் பத்திராஜ் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சகம் அவரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உறுப்பினராகவும் தேசிய விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் நியமித்துள்ளது.
அசோக் பாத்திராஜ் சொப்ட்லோஜிக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நாட்டின் பல முக்கிய வணிக நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018-2019 நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 168 மில்லியன் டொலர் நட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றும் முக்கிய சவால் புதிய தலைவருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.