அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இலங்கை கல்வி அமைச்சினால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்ற உதைபந்தாட்டப் போட்டியில் இருபது வயதுப் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரி வெற்றிபெற்று தேசிய சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.
கொழும்பு சிற்றிலீக் உதைபந்தாட்ட மைதானத்தில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் மகாஜனாக் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் அங்கம் பெறுகின்ற வீராங்கனை சானு மகாஜனாக் கல்லூயின் வெற்றிக் கோலினை பெற்றுக்கொடுத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: