Friday 19th of April 2024 04:39:50 AM GMT

LANGUAGE - TAMIL
பாடசாலைக்கு முன்பாக வைத்து பட்டாசுகள் விற்பனை!

பாடசாலைக்கு முன்பாக வைத்து பட்டாசுகள் விற்பனை!


வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாதுகாப்பற்ற முறையில் பொங்கல் பட்டாசுகளை விற்பனை செய்யும் நடவடிக்கை வவுனியா நகரசபையின் தலையீட்டை அடுத்து அகற்றப்பட்டது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று மதியம் குறித்த பகுதியில் நபர் ஒருவர் பட்டாசுகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் பட்டாசுகளை வாங்குவதற்காக அதிகளவான மாணவர்கள் பாடசாலை முடிவடைந்ததும் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.

இதனை அவதானித்த வவுனியா சிரேஸ்ட சட்டதரணி இ. தயாபரன் பட்டாசு விற்பனை செய்யும் நபரிடம் சென்று இவ்விடத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வது மாணவர்களிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நகரசபை தலைவரின் நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நடவடிக்கை அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE