கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் 100வது ஆண்டு சிறப்பு பொங்கல் நிகழ்வு இன்று கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
காலை 10.30 மணியளவில் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டை தொடர்ந்து பிரதான பொங்கலினை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது இரணைமடு குளத்தின் 100வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 100 பானைகளில் பொங்கலிடப்பட்டது,
அதனைத் தொடர்ந்து இரணைமடு குளத்தின் 100வது ஆண்டினை சிறப்பிக்கும் சிறப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.