யேமன் இராணுவ குடியிருப்புகள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குகுதலில் 60 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், டசின் கணக்கானோர் காயமடைந்தனர்.
யேமன் வட-கிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் உள்ள இராணுவக் குடியிருப்பை இலக்குவைத்து நேற்று சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி சவுதி அரச தொலைக்காட்சி நேற்றிரவு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் யேமனை மையமாகக் கொண்டு ஒரு பனிப்போர் நடந்து வருகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகளுக்கு எதிராக போராடும் யேமன் அரச படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டணி 2015 இல் தலையிட்டது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்து வருவதாக சவுதி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது.
எனினும் ஹவுத்திகளுக்கு தாங்கள் ஆயுதங்களை வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.