தைப்பொங்கல் தினத்தன்று அல்வாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயை வசிப்பிடமாக கொண்ட இரவீந்திரன் தனுசன் (வயது_25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவரது உறவினர் வீட்டிற்கு சென்று தனது வீடு நோக்கி திரும்பி வரும் வழியில் அல்வாய் உள்ளூர் வீதியில் அமைந்துள்ள வளைவில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் வளைவில் நின்ற மரத்துடன் மோதியுள்ளது.
தலைக்கவசம் இன்றி பயணம் செய்தமையினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த ஆறு நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சிகிச்சை பலனின்றி இன்று காலை வைத்தியசாலையில் உயிரிழந்தார் .