மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தின் அலுவலகத்தின் உள்ளேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் நினைவு நிகழவு ஒன்றில் பங்குகொண்டவர்களின் ஒளிப்படத்தில் ஊடகவியலாளர்கள் ஆறு பேரின் முகங்களுக்கு வட்டம் இடப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை! இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ்.
இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.